search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊராட்சி மன்ற தலைவர் தாக்குதல்"

    தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஊராட்சி மன்ற தலைவரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள பித்தளைப்பட்டி ஊராட்சிமன்ற தலைவராக இருப்பவர் மயில்சாமி. (வயது 52). இவர் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராகவும் உள்ளார். இவர் இன்று காலை தனது வீட்டு அருகே நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் (55) என்பவர் தனது வீட்டில் குடிநீர் சரிவர வருவதில்லை என மயில்சாமியிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் சரியாக வரும் போது உனது வீட்டுக்கு மட்டும் எப்படிகிடைக்காமல் இருக்கும் என கேட்டுள்ளார்.

    இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தன் வீட்டில் வந்து குடிநீர் இணைப்பை பார்க்கும்படி முருகேசன் கூறியுள்ளார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஊராட்சிமன்ற தலைவர் மயில்சாமியை குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×